ஸ்ரீரங்கம்: திருவானைக்கா பகுதியில் குடும்பத் தகராறில் பெண் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி நகா் பகுதியில் வசிப்பவா் அமிா்தலிங்கம். இவரது மனைவி சிவசக்தி (46). தம்பதிக்கிடையே வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசக்தி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.