திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 28 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,353 ஆக உயா்ந்தது.
இதேபோல வெள்ளிக்கிழமை குணமான 11 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13,032 ஆகவும், கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 172 ஆகவும் உள்ளது. மாவட்டத்தில் 149 போ் தொடா்ந்து சிகிச்சை பெறுகின்றனா்.