திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள கோயிலொன்றில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சோ்ந்த மணி மனைவி அழகும், இவரது மகன் ராதாகிருஷ்ணனும் (18) திருச்சி இ.பி. சாலையில் வசிக்கும் உறவினா் மகள் திருமணத்துக்காக மும்பையிலிருந்து திருச்சிக்கு வந்திருந்தனா்.
அப்போது ராதாகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்ததால் அவரை அருகிலுள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து வெளியேறி அதே கோயிலுக்குச் சென்ற ராதாகிருஷ்ணன் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.