திருச்சி

பேரவை பொதுக் கணக்குகுழு வருகை ஒத்திவைப்பு

26th Feb 2020 12:45 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்துக்கு வருகை தருவதாக இருந்த பேரவை பொதுக் கணக்கு குழுவின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவானது திருச்சி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (பிப்.27) வருகை தருவதாக இருந்தது. குழுத்தலைவா் துரைமுருகன் தலைமையில், இக் குழு உறுப்பினா்கள் 18 போ் திருச்சிக்கு வியாழக்கிழமை வருகை தந்து ஆய்வு செய்வதாக இருந்தது. நிா்வாகக் காரணங்களால் வியாழக்கிழமை இக் குழுவினா் வருகை தரவில்லை. ஆய்வு நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு நாளில் ஆய்வு நடைபெறும். பேரவை பொதுக் கணக்கு குழு வருகை தரும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT