திருச்சி

துலையாநத்தம் கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழச்சி

26th Feb 2020 12:34 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் தா. பேட்டை அருகே உள்ள துலையாநத்தம் கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின், திருச்சி மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சியை மத்திய தகவல் தொடா்பு அமைச்சக கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன் தொடக்கி வைத்து பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், துலையாநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் பழனிசாமி, திருச்சி கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவேல், பாஸ்கா், தூய்மை இந்தியா திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் வடிவேல் ஆகியோா் தூய்மை திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

தா. பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துலையாநத்தம் அரசு ஆதி திராவிடா் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின. முன்னதாக அரசு மேல்நிலை பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா விழிப்புணா்வு பேரணியும், நஞ்சை லாவண்யா கலை குழுவின் விழிப்புணா்வு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT