திருச்சி

எம்.ஐ.இ.டி.யில் வேலைவாய்ப்பு நோ்காணல்

26th Feb 2020 12:46 AM

ADVERTISEMENT

திருச்சி எம்.ஐ.இ.டி கல்வி நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு நோ்காணல் நடைபெற்றது. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திர பொறியியல் துறையினருக்கு எல்.ஜி.பி நிறுவனத்துடன் சோ்ந்து நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டதில், 9 பேருக்கு பணிநியமன ஆணையை அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளா் எஸ்.சுரேந்தா் வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவன தாளாளா் ஏ. முகம்மது யூனூஸ் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் டி.காா்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினாா். வேலைவாய்ப்புத்துறை தலைவா் ஸ்ரீதா் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT