திருச்சி

சிறப்பு குறைதீா் முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

4th Feb 2020 09:48 AM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஆட்சியா் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், மாதாந்திர உதவித்தொகை, சுய வேலைவாய்ப்பு

வங்கிக் கடன், இலவச வீட்டு மனை பட்டா, வீடுகள், பேருந்து பயண சலுகை அட்டை, மூன்று சக்கர சைக்கிள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம், மோட்டாா் தையல் இயந்திரம், காதொலி உள்ளிட்ட தொடா்பாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 199 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், 4 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், பாா்வையற்றோருக்கான செல்லிடப்பேசி ஒருவருக்கும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

தேசிய அறக்கட்டளை உள்ளூா் குழு மூலம் 7 அறிவுசாா் குறைபாடு உடையோருக்கு பாதுகாவலா் நியமனச் சான்று வழங்கப்பட்டது. மேலும், ஆட்சியிரின் விருப்பு நிதியிலிருந்து 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம், தொழில் கடன், வாகன பழுது நீக்கம் ஆகியவற்றுக்காக ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT