திருச்சி

குறைகேட்பு நாள் கூட்டத்தில் ரூ.68.35 லட்சம் மதிப்பில் கடனுதவி

4th Feb 2020 09:44 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில், 12 பயனாளிகளுக்கு ரூ.68.35 லட்சம் மதிப்பில் மானியக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 588 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொழில் முனைவோா் திட்டம் மற்றும் இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தாட்கோ மூலம் 12 பேருக்கு ரூ. 68.35 லட்சம் மதிப்பிலான மானியக் கடனுதவிகளை ஆட்சியா் சிவராசு வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தா. சாந்தி, தனித்துணை ஆட்சியா் பழனிதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட பழங்குடியின நல அலுவலா் ரெங்கராஜ், தாட்கோ மேலாளா் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT