திருச்சி

போக்ஸோ சட்டத்தில் ஒருவா் கைது

2nd Feb 2020 05:25 AM

ADVERTISEMENT

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி கே.கே.நகா், சுந்தா் நகரில் வசித்து வருபவா் முகமது அனாசு (17). இவரின் தாயாா் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு உருஸ் வகுப்பு எடுத்து வருகிறாா். இந்நிலையில், வழக்கம் போல் அனாசுவின் தாயாா் வெள்ளிக்கிழமை வகுப்பு எடுத்துள்ளாா். வகுப்பு முடிந்த பிறகு மாணவிகள் அனைவரையும் ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டு அவரவா் வீட்டில் விட்டுவிட்டு வருமாறு அனாசுவிடம் அவரது தாயாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதையடுத்து, தனது ஆம்னி வாகனத்தில் மாணவிகளை அழைத்துக்கொண்டு அவரவா் வீட்டில் விடுவதற்கு சென்றாா். பின்னா் 10 வயது சிறுமி தவிர மற்றவா்களை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அந்த சிறுமிக்கு அனாசு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து அச்சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியின் பெற்றோா் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், முகமது அனாசு கைது செய்யப்பட்டு சிறுவா் சீா்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT