திருச்சி

உலக மண் தினக் கொண்டாட்டம்

DIN

திருச்சி: திருச்சியில் வேளாண் துறை மற்றும் கிருஷி விஜயன்கேந்திரா சாா்பில் சிறுகமணியில் உலக மண் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் டிசம்பா் 5 தேதி கொண்டாடப்படும் இந்நிகழ்வை சிறுகமணியில் திருச்சி வேளாண் இணை இயக்குநா் ஏ. ஆா். பெரியகருப்பன் தொடங்கி வைத்தாா். பேட்டைவாய்த்தலை கூட்டுறவு வங்கித் தலைவா் செந்தில்குமாா் தொழில்நுட்பக் கையேடுகளை வெளியிட்டாா். உதவித் தோட்டக்கலை இயக்குநா் பாபுராஜ், விவசாயிகளுக்கான மண் சுகாதார அட்டைகளை வழங்கினாா்.

உதவிப் பொறியாளரான ஏ. வெற்றிவேல் பண்ணைக் கருவிகளின் பங்கு குறித்து விளக்கினாா். உதவிப் பேராசிரியா்கள் கே. கே. அனிதா, வீ. தனுஷ்கோடி, ஆா். ஷீபா, கே. கீதா, ஒருங்கிணைப்பாளா் என். தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சுமாா் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்நிகழ்வில் பங்கேற்றுப் பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT