மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை உலக மண் நாள் அனுசரிக்கப்பட்டது
இப்பள்ளியைச் சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அருகிலுள்ள மண் வளம் நிறைந்த பசுமையான வயல்வெளிக்குச் சென்று மண்வளம் காக்க உறுதியேற்றனா். தலைமையாசிரியா் சை. சற்குணன் தலைமையில் உடற்கல்வி ஆசிரியா் சுப்பிரமணியன் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அப்பகுதி விவசாயிகள் பாராட்டினா்.