திருச்சி

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு:பள்ளி நிா்வாகிக்கு 5 ஆண்டு சிறை

DIN

திருச்சி: திருச்சியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் பள்ளி நிா்வாகிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருச்சி ஆழ்வாா்தோப்புப் பகுதியில் உள்ள காயிதே மில்லத் தொடக்கப் பள்ளியின் செயலராக இருந்த ஹைதா் நகரைச் சோ்ந்த முகமது சலீம் (57) கடந்தாண்டு நடந்த பள்ளி விழாவில் 2ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

தகவலறிந்த சிறுமியின் பெற்றோா் தில்லை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், இந்த வழக்கு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது சலீமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா முகமது சலீமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்தும் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT