திருச்சி: குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.
திருச்சி பெரியமிளகுப்பாறை வேடுவா் தெருவைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன் ஆதிபாலா (23). இவா் அக்.24 ஆம் தேதி திருவானைக்கா கொள்ளிடம் பாலம் அருகில் சரக்கு வாகனத்தில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த மேலகொண்டையம் பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த பரணிதரன்(33), அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா்(21) ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி ஆதிபாலாவைத் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். இவா்களில் ஏற்கெனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த பரணிதரனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.