திருச்சி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி நீதிமன்றம் முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு முற்போக்கு பெண்கள் வழக்குரைஞா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் பானுமதி தலைமை வகித்தாா். இதில் வழக்குரைஞா் கென்னடி உள்பட 20 போ் பங்கேற்று கோஷம் எழுப்பினா்.