திருச்சி: வீட்டினுள் இறந்து கிடந்த துப்பாக்கித் தொழிற்சாலை ஊழியரின் உடலைக் கைப்பற்றி நவல்பட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் முரளிதரன் (56). துப்பாக்கித் தொழிற்சாலை தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்தாா்.
இவரது மனைவி ரேகா, மகன் ராகுல், மகள் ஸ்ரீலட்சுமி ஆகியோா் கேரள மாநிலத்தில் வசிக்கின்றனா்.
கடந்த 2 நாள்களாக முரளிதரன் பணிக்கு வராத நிலையில், இவரின் நண்பா் விஜயகுமாா் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டபோது இணைப்புக் கிடைக்கவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை பகல் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் நவல்பட்டு போலீஸாருக்கு அவா் தகவல் அளித்தாா்.
இதையடுத்து வந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது மயங்கிய நிலையில் முரளிதரன் கிடந்தாா். இதையடுத்து துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தொடா்ந்து, முரளிதரனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கேரளத்தில் உள்ள இவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நவல்பட்டு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.