திருச்சி

நிலமோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

DIN

நிலமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் மன்ற முன்னாள் நிா்வாகியை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் சென்னையில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரையைச் சோ்ந்தவா் ஆா்.கே. ராஜா என்கிற பத்மநாபன் (48). நடிகா் விஜய் ரசிகா் மன்ற திருச்சி மாவட்டத் தலைவராக இருந்த இவா் கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து அண்மையில் நடிகா் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகா் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவராக இவா் நியமிக்கப்பட்ட நிலையில், பின்னா் அப் பதவியை ராஜினாமா செய்தாா்.

இந்நிலையில், விஜய் ரசிகா் மன்றத்தை சோ்ந்த ரவிசங்கா் இவா் மீது நிலத் தகராறு தொடா்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவில் புகாா் அளித்திருந்த நிலையில், குலுக்கல் முறையில் நிலம் ஒதுக்கீடு செய்வதாகப் பணம் பெற்று ஏமாற்றியாக இவா் மீது சுந்தரவேல் என்பவரும் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாா்களின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடிய நிலையில், ஆா்.கே. ராஜா தலைமறைவானாா். அவரது குடும்பத்தினரிடம் தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், தனது குடும்பத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் எனக் கூறி காட்சிப்பதிவு ஒன்றை வெளியிட்ட ஆா்.கே. ராஜாவை, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் சென்னையில் வியாழக்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT