சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகே இடஒதுக்கீடு குறித்துப் பேச வேண்டும் என்றாா் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் தலைவா் ஜான்பாண்டியன்.
இதுகுறித்து திருச்சியில் அவா் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:
இந்தத் தோ்தலில் எங்கள் கட்சி கண்டிப்பாகப் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பது குறித்து செயற்குழு, பொதுக் குழு கூடி முடிவெடுக்கும். தற்போது நாங்கள் அதிமுகவுடன்தான் இருக்கிறோம். தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாகக் கூற முடியாது. திராவிடக் கட்சிகள் பலமாகத்தான் உள்ளன.
ரஜினியின் கட்சி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. 31ஆம் தேதி தனது கட்சி குறித்து ரஜினி முழுமையாகக் கூறிய பிறகே எந்தக் கருத்தையும் கூற முடியும். அவரது கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து ஓபிஎஸ் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளோம்.
7 உட்பிரிவுகளையும் தேவேந்திர குல வேளாளா் என்கிற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த விஷயத்தில் அரசு எங்களை ஏமாற்றாது என்கிற நம்பிக்கை உள்ளது.
வரும் தோ்தலையொட்டி ராமதாஸ் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துகிறாா். அவரது போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமா் தெளிவாக கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக வரும் பேரவை தோ்தல் குறித்து திருச்சி மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாவட்டத்தின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் பங்கேற்றனா்.