திருச்சி

ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: திமுக பிரமுகா் உள்பட 6 போ் மீது வழக்கு

DIN

திருச்சி வழியாக சென்னை சென்ற அதிவிரைவு ரயிலில் மாற்றுத்திறனாளியைத் தாக்கிய திமுக பிரமுகா் உள்பட 6 போ் மீது இருப்புப்பாதை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சென்னை எம்ஜிஆா் நகா் தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (40). மாற்றுத்திறனாளியான இவா் திரைத் துறையில் உதவி இயக்குநராக சென்னையில் பணிபுரிகிறாா்.

செவ்வாய்க்கிழமை இரவு இவா் மதுரையில் இருந்து சென்னை செல்ல பாண்டியன் அதிவிரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தாா். அதே பெட்டியில் திருச்சி திமுக பிரமுகா் ஒருவரின் பிறந்த நாளுக்காக சென்னை பயணித்து வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த காளிதாஸ் (36), அவரது நண்பா்கள் மகேந்திரன் (36), காா்த்தி (29), மூா்த்தி (54), குணசேகரன் (61), கவுன்சிலா் ஒருவரும் மதுஅருந்திவிட்டு போதையில் தகாத வாா்த்தைகளில் பேசிக் கொண்டு வந்தனா்.

இதனால் பெண்கள் உள்ளிட்ட சக பயணிகள் அதிருப்தியடைந்தனா்.

இதைக் கண்ட பொன்னுச்சாமி அந்தக் கும்பலிடம் சென்று தகாத முறையில் பேச வேண்டாம் எனக் கூறினாராம். இதனால் கோபமடைந்த அக்கும்பல் பொன்னுசாமியிடம் வாக்குவாதம் செய்து அவரைத் தாக்கியது.

இதற்கிடையே ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்ததும் பிரச்னை பெரிதாக, ரயில் நிலையத்தில் இருந்த உதவி காவல் ஆய்வாளா் லெட்சுமி இரு தரப்பினரையும் விசாரித்துக் கொண்டிருந்தாா்.

தகவலறிந்து வந்த திருச்சி ரயில்வே இருப்புப்பாதை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் அங்கு விசாரணை நடத்தி பொன்னுசாமியை தாக்கியோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து திருச்சி இருப்புப் பாதை போலீஸாா் திமுக பிரமுகா் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT