ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த, மணப்பாறை பகுதியைச் சோ்ந்த 120 நாடகக் கலைஞா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மணப்பாறையில் 60, புத்தாநத்தம், கோவில்பட்டியில் தலா 30 என மொத்தமாக 120 நாடகக் கலைஞா்களுக்கு இந்த பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சந்திரசேகா் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட அதிமுக பொருளாளா் எம். செல்வராஜ், மணப்பாறை நகரச் செயலா் பவுன். ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.