துறையூர் அருகே புதன்கிழமை நாட்டுத் தோட்டாவை கல்லால் உடைத்து விளையாடிய சிறுவன் பலத்த காயமடைந்தார்.
துறையூர் அருகிலுள்ள நல்லியம்பாளையத்தைச் சேர்ந்த சேகர் மகன் நவீன்(11). மேட்டு சொரத்தூர் அரிசி ஆலையில் வேலை செய்த தாத்தாவைப் பார்க்க புதன்கிழமை காலை நவீன் சென்றார்.அப்போது தரையில் வினோதமாக தென்பட்ட பொருளை கையில் எடுத்து கல்லால் தட்டி உடைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த பொருள் வெடித்தது. இதில் சிறுவனின் வலது கையின் நான்கு விரல்கள் துண்டானது. வலது கண் முற்றிலும் சேதமடைந்தது. வெடித்து சிதறிய துகள்கள் சிறுவனின் மார்பையும் சேதமாக்கியது.
அருகிலிருந்தவர்கள் சிறுவனை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை அளித்தனர். உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக சமயபுரம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்து முசிறி காவல்துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.