திருச்சி அருகே உள்ள எட்டரை சகாயமாதா ஆலய தேர்பவனி ஞாயிற்றுகிழமை இரவு நடைபெற்றது.
சோமரசம்பேட்டை அருகில் உள்ள எட்டரை சகாயமாதா ஆலயத்தின் தேர்பவனி விழா கடந்த 13ஆம்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு எட்டரையின் முக்கிய வீதியின் வழியாக பவனி வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பின்னர் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.