திருவிழாவில்  மோதல்: 6 பேர் கைது

மணப்பாறை அருகே ஆலயத் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மணப்பாறை அருகே ஆலயத் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மலையடிப்பட்டியிலுள்ள தூய தோமையார் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இருதரப்பினருக்கு இடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.இதில் சிலர் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றனர். காவல்துறை சார்பில் இருதரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. 
இதைத் தொடர்ந்து, இடையப்பட்டியான்பட்டியைச் சேர்ந்த எம். குமார்  (35), எம். சண்முகம் (28), பொ. பூப்பாண்டி(50), சி.துரை(45),  அ.பழனிவேல்(27), தி. மோகன்(19) என இருதரப்பைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com