முசிறி வட்டம், தாத்தையங்கார்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இட்லி கடைக்காரர் உயிரிழந்தார்.
தாத்தையங்கார்பேட்டை கடைவீதியைச் சேர்ந்தவர் நைனாமலை (53). பேருந்து நிலையம் அருகே இட்லி கடை நடத்தி வந்த இவர், செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் தா.பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நைனாமலை ஓட்டிச் சென்றமோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தா.பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.