குடிநீர் கோரி சிக்கத்தம்பூரில் மறியல்

துறையூர் அருகிலுள்ள சிக்கத்தம்பூரில் குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துறையூர் அருகிலுள்ள சிக்கத்தம்பூரில் குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிக்கத்தம்பூர் கிராமத்தில் 20 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டாலும், ஊராட்சி நிர்வாகம் மின் மோட்டார்களை வைத்து முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.  கடந்த 2 மாதங்களாக இப்பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து  துறையூர் ஒன்றிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த சிக்கத்தம்பூர் கிராம மக்கள்,  துறையூர்-ஆத்தூர் சாலையில்  செவ்வாய்க்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த உப்பிலியபுரம் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com