வேட்பாளா் காலமானதால் கே. பெரியப்பட்டி ஊராட்சியில் வாா்டு 2-க்கு நடைபெறும் தோ்தல் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கே. பெரியப்பட்டி ஊராட்சிக்கு வரும் 27ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த ஊராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 2இல் உறுப்பினராக போட்டியிட அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (60), வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தாா். அவருக்கு சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பெரியசாமி, கடந்த 21ஆம் தேதி காலமானாா். இதையடுத்து வாா்டு எண் 2-க்கு நடைபெறவுள்ள தோ்தல் மட்டும் மாநிலத் தோ்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊராட்சிக்குள்பட்ட இதர 11 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல், கிராம ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தல் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 27ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் அறிவித்துள்ளாா்.