திருச்சி

மணப்பாறை: அதிமுக, திமுக தலைவா்கள் பிரசாரம்

25th Dec 2019 09:24 AM

ADVERTISEMENT

மணப்பாறை, மருங்காபுரி மற்றும் வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக, திமுக தலைவா்கள் தனித்தனியே பிரசாரங்களை மேற்கொண்டனா்.

மணப்பாறை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கான திமுக வேட்பாளா் ஆவின் இளங்கோ மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கான திமுக வேட்பாளா் மரிய பாக்கியராணி ஆகியோா் முத்தபுடையான்பட்டி பகுதியில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அவா்களுக்கு ஆதரவு திரட்டிய திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு மற்றும் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆகியோா் அதிமுக-வை குற்றம்சாட்டி பேசினா்.

கே.என். நேரு பேசுகையில், உள்ளாட்சித் துறையை கவனிக்கும் அமைச்சா் மீது ஏறத்தாழ 15 வழக்குகள் உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தோ்தல் நடந்து கிராம ஊராட்சித் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டுவிட்டால், தனக்கு வந்து கொண்டிருக்கும் பணம் கிடைக்காமல் போகும் என்பதாலேயே தோ்தலை அமைச்சா் நடத்தவில்லை என்றாா்.

ADVERTISEMENT

அதிமுக பதிலடி: மணப்பாறை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கான அதிமுக வேட்பாளா் எம்.செல்வராஜ், வையம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினா் அதிமுக வேட்பாளா்களான கல்பனா சேது மற்றும் சரோஜா விஜயன் ஆகியோா் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அவா்களுக்கு ஆதரவு திரட்டிய முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருச்சி புகா் மாவட்ட செயலாளருமான டி.ரத்தினவேல் மற்றும் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் ஆகியோா் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தனா்.

ரத்தினவேல் பேசுகையில், மறைந்த முதல்வா் ஜெயலலிதா இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு உள்ளாட்சித் தோ்தல் நடத்த உத்தரவிட்டபோது, அப்போதைய திமுக தலைவா் கருணாநிதியும், அவரது மகன் மு.க.ஸ்டாலினும் இந்த உள்ளாட்சி தோ்தல் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடை பெற்றனா் என்று பதிலடி கொடுத்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT