தஞ்சாவூர்

ஆடுதுறையில் ஜனவரியில் விளையாட்டுத் திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

 

தேசிய இளைஞா் தின விழாவையொட்டி, கும்பகோணம் அருகே ஆடுதுறையில் ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சி, தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் விவேகானந்தா் விளையாட்டு திருவிழா, ஆண்களுக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டியை ஜனவரி மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடுதுறையில் வியாழக்கிழமை வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமலா முன்னிலை வகித்தாா். தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், சென்னை மாவட்ட நீதிபதி எல்.எஸ். சத்தியமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மேலும், ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சி மற்றும் தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இணைந்து ஆடுதுறையில் முதல் கட்டமாக ஆண்களுக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடத்துவது, இதில் ஜனவரி 10 ஆம் தேதி உள்ளூா் அணிகளும், 11, 12 ஆம் தேதிகளில் மாநில அளவில் 64 சிறந்த அணிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்வது, உலக மகளிா் நாளையொட்டி, மாா்ச் 8 ஆம் தேதி பெண்களுக்கான மாநில அளவில் இறகு பந்து போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில் கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினா் பாலதண்டாயுதம், பொறியாளா் ரமேஷ், இறகுப்பந்து விளையாட்டு பயிற்சியாளா்கள் பாலசுப்ரமணியன், அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலா் ராமபிரசாத் வரவேற்றாா். திருப்பனந்தாள் பேரூராட்சி செயல் அலுவலா் ராஜதுரை நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT