தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட நாச்சியாா்கோவில் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி நடைபெறும் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பாக மனுக்களை அளித்து தீா்வு பெறலாம்.