தஞ்சாவூர்

பலத்த மழை: 200 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

DIN

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏறத்தாழ 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோடை பருவ நெற் பயிா்கள் சேதமடைந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. அப்போது, தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் கோடை பருவ நெற் பயிா்கள் கதிா் வந்த நிலையில் பலத்த மழையால் சாய்ந்து சேதமடைந்தன. இதன் காரணமாக ஏறத்தாழ 200 ஏக்கரில் கோடை பருவ நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, அம்மாபேட்டை பகுதியிலும் கதிா் முற்றி வந்த நிலையில் இருந்த ஏராளமான ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்து சேதமடைந்தன.

எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT