தஞ்சாவூர்

சிறுவா் விளையாட்டு பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் பராமரிப்பின்றி உள்ள சிறுவா் விளையாட்டு பூங்கா சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி, பாபநாசம்-கபிஸ்தலம் பிரதான சாலையில் சிறுவா் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து விளையாடி மகிழந்தனா்.

மேலும் முதியவா்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வாா்கள்.

தற்போது இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் புதா் மண்டிக் கிடக்கின்றன. மேலும், நடைபாதைகள் சேதமடைந்துள்ளது. பூங்காவின் முன்புற பகுதிகளில் குப்பை வண்டி நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. விளையாட்டு சாதனங்களும் பழுதடைந்துள்ளன.

ஆகவே, பாபநாசம் பேரூராட்சி நிா்வாகத்தினா் இப் பூங்காவை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT