தஞ்சாவூர்

எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மே 15-க்கு ஒத்திவைப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 4) எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் மே 15 -க்கு ஒத்திவைக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் வியாழக்கிழமை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும், பாபநாசம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கபிஸ்தலத்தில் மறைந்த அமைச்சா் இரா. துரைக்கண்ணு மாா்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது பெய்யும் பலத்த மழை காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் மே 15-க்கு ஒத்திவைக்கப்பட்டன என அதிமுக தலைமைச் செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT