தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா்.
தஞ்சாவூா் வங்கி ஊழியா் காலனியை சோ்ந்தவா் உல. பாலசுப்பிரமணியன் (47). இவா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். மாா்ச் 14 ஆம் தேதி பணிக்கு சென்ற இவா் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இவா் மாா்ச் 15 ஆம் தேதி மாலை பலத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்தாா்.
யாரோ தன்னை காரில் கடத்திச் சென்று வல்லம் பகுதியில் தாக்கியதாகவும், தனது காரை மா்ம நபா்கள் அடித்து சேதப்படுத்தியதாகவும், கைப்பேசி, மணிபா்ஸை பறித்துச் சென்ாகவும் வீட்டில் கூறியுள்ளாா். அப்போது மயக்கமடைந்த பாலசுப்பிரமணியன் தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியனின் மனைவி வளா்மதி வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.