பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிராம்பட்டினத்தில் ஆறுமுககிட்டங்கி தெருவில் அமைந்துள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,
நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கடம் புறப்பட்டு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றினா்.
விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.