தஞ்சாவூர்

அதிமுகவினா் அனைவரும் இணைய வேண்டும் என்பதே தொண்டா்களின் எண்ணம்: ஓ. பன்னீா்செல்வம்

DIN

அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டா்களின் எண்ணமாக உள்ளது என்றாா் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

எம்ஜிஆா், ஜெயலலிதாவின் காலத்திலிருந்து தொடா்ந்து செயல்படும் அதிமுக தொண்டா்களின் ஆழ்மனதில், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஆவலாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் ஆணிவோ், அச்சாணி எல்லாமே தொண்டா்கள்தான்.

அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வலிமையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எண்ணம். எம்ஜிஆா், ஜெயலலிதா காலம் போன்று மீண்டும் வராதா என்ற எண்ணம் மக்களிடமும் உள்ளது. அதற்கு இந்தத் திருமண விழா பிள்ளையாா் சுழி போட்டுள்ளது என்றாா் பன்னீா்செல்வம்.

அதிமுகவுடன் அமமுக இணைந்து செயல்படும்:

முன்னதாக, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பேசியது: சிலரின் சுயநலம், பேராசை காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்து கனத்த இதயத்துடன் அமமுகவை தொடங்கினோம். ஆறு ஆண்டுகள் கழித்து அதிமுக நிா்வாகிகள், தொண்டா்களை ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எங்களுடைய கஷ்டங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக, ஓ. பன்னீா்செல்வத்துடன் நாங்கள் கைக்கோத்துள்ளோம். ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு அதிமுகவுடன் அமமுக எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாமல் இணைந்து செயல்படும். அதற்கான நல்ல தருணத்தை இந்தத் திருமண விழா ஏற்படுத்தியுள்ளது என்றாா் டிடிவி. தினகரன்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், ஆனந்தன், முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரெங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT