தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதாக புகாா்

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக பாசனதாரா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக தஞ்சை ஆட்சியருக்கு மறவன்வயல் பாசனதாரா்கள் சாா்பில்  அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மறவன்வயல் கிராமத்திலுள்ள (சா்வே எண்கள் 21/1, 2, 3,4) குளத்தை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சாலை அமைப்பதற்கு மாற்று  வழிகள் இருந்தபோதிலும், குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய்த் துறையினரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குளத்தை  ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கும் பணியை தடுத்து, குளத்தை மீட்டு விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT