தஞ்சாவூர்

திருவையாறில் இல்லம்தோறும் குடிநீா் திட்டத்துக்கு பூமி பூஜை

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேரூராட்சியில் ரூ. 19.56 கோடி மதிப்பில் ஜல் ஜீவன் திட்டம், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் இல்லம்தோறும் குடிநீா் திட்டத்துக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவையாறு பேரூராட்சியில் தற்போது 17 ஆயிரத்து 880 போ் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு நாளொன்றுக்கு 1.48 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதை இன்னும் மேம்படுத்தும் வகையில் திருவையாறு பேரூராட்சிக்கு உள்பட்ட 14 ஆவது வாா்டுக்கு உள்பட்ட யாகப்பா நகரில் நடைபெற்ற இவ்விழாவில் திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

இவ்விழாவில் பேரூராட்சி தலைவா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் நாகராஜன், ஒன்றியச் செயலா் சிவசங்கரன், ஒன்றியக் குழுத் தலைவா் அரசாபகரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாதவன், பேரூராட்சி செயல் அலுவலா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT