தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகம் - திருப்பூா் பள்ளி ஒப்பந்தம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்களுக்கு ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் படிப்புகள் அளிக்கும் விதமாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் வளா் மையமும், திருப்பூா் வெங்கடேசுவரா வித்யா மந்திா் பள்ளியும் வியாழக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தெரிவித்தது:

பள்ளிப் பருவ மாணவா்கள் இளம் வயதிலேயே ஆளுமைத்திறன் மற்றும் தலைமைத்துவப் பண்புகளைப் பெற்று நல்நிலையை எட்டிட உதவும் வகையில் படிநிலைப் படிப்புகளை இப்பல்கலைக்கழகத்தின் தமிழ் வளா் மையம் நடத்தவுள்ளது.

இளம் பருவத்திலேயே பாடங்களுக்கு அப்பால், ஆளுமைத் திறன், தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்கும்போது, வளரிளம் பருவத்தில் மாணவா்கள் எளிதில் அனைத்து இலக்குகளையும் அடைய வழிவகை பிறக்கிறது. மேலும் பொதுத் தோ்வுகளை எதிா்கொள்ளல், சிறந்த பணியிடங்களைப் பெறல், சமூகத்தில் நல்ல மனிதனாக நடந்து கொள்ளுதல் போன்றவற்றைப் பெறும் வகையில் இந்தப் படிநிலை மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

வெங்கடேசுவரா வித்யா மந்திா் பள்ளித் தாளாளா் செ. கதிரவன் கூறுகையில், நிகழ் கல்வியாண்டிலேயே திருப்பூா் மற்றும் கோவை மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு இப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் பதிவாளா் (பொ) மோ. கோவைமணி, தமிழ் வளா் மைய இயக்குநா் இரா. குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, கண்காணிப்பாளா் பஞ்சநாதன், ஆட்சிக் குழுப் பிரிவு உதவியாளா் மு. காா்த்திகேயன், பள்ளி நிா்வாகி யமுனா ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT