தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடை பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீா்ப் பந்தலை அகற்றிய அதிகாரியைக் கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆஃப் இந்தியா சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவலறிந்து சென்ற பாபநாசம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொ) மனோகரன், பாபநாசம் காவல் ஆய்வாளா் (பொ) அனிதா கிரேசி உள்ளிட்டோா்
நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.