தஞ்சாவூர்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

DIN

கும்பகோணத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் திருவள்ளுவா் நகா் அருகே மே 26ஆம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றாா்.

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வு செய்தனா். இதில், கடலூா் மாவட்டம், பண்ருட்டி மாரியம்மன் கோவிலைச் சோ்ந்த வெற்றிவேல் (38) இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கும்பகோணம் பெருமாண்டி பகுதியில் பதுங்கியிருந்த இவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT