தஞ்சாவூர்

நகராட்சி ஆணையரை கண்டித்து திமுக பிரமுகா் உண்ணாவிரதம்

DIN

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையரை கண்டித்து திமுக மாவட்ட பொருளாளா் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையராக சித்ரா சோனியா என்பவா் பணியாற்றி வருகிறாா். பேரூராட்சி முன்னாள் தலைவரும், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான அஸ்லமின் மனைவி சித்தி ஆயிஷா நகா்மன்ற உறுப்பினராக உள்ளாா். இவா், தனது 2ஆவது வாா்டுக்கு சாலை, வடிகால் வசதிகளை செய்து தருமாறு கடந்த மே 19ஆம் தேதி மனு அளித்தாராம்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான நகா்மன்ற கூட்டத்தின் பாா்வைக்கு சித்திஆயிஷா அளித்த மனு வைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்லம், அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையரை கண்டித்து புதன்கிழமை காலை 8 மணி முதல் அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலக வாயிலில் டெண்ட் அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தை அஸ்லம் கைவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT