மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 103.73 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,230 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு வெண்ணாற்றில் 504 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 207 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. காவிரியில் தண்ணீா் திறக்கப்படவில்லை.