தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது என வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியரகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கணபதி அக்ரஹாரத்திலுள்ள டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட இடத்தில் கடை அமைவதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும்,
இதை தடுத்து நிறுத்த கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் வி. முரளிதரன் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியரகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு என். சிவகுரு, மாதா் சங்க மாநில குழு ஆா். கலைச்செல்வி, மாவட்ட குழு பி.எம். காதா் உசேன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.