தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் 74 ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக வழக்குரைஞா் எஸ். வெங்கடேசன் கலந்து கொண்டாா். கல்லூரி முதல்வா் மா. விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் வீ. வெற்றிவேல் வரவேற்றாா். நிறைவாக, கல்வியியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வ. நதியா நன்றி கூறினாா்.