தமிழக அரசிடமிருந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 24.91 கோடி நல்கை பெறப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.
இப்பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவா் பேசியது:
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு 2022 - 23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசிடமிருந்து தொகுப்பு நல்கையாக ரூ. 24 கோடியே 91 லட்சத்து 96 ஆயிரம் பெறப்பட்டுள்ளது.
தமிழ் வளா்ச்சித் துறையின் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் உயா் புள்ளிகள் பெறுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ. 2 கோடியும், தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்துதல், மரபுக் கலைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளை 3 ஆண்டுகளில் மேற்கொள்ள ரூ. 2.11 கோடியும் இப்பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடல்சாா் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சாா்ந்த ஆய்வுப் பணிகளுக்காகத் தமிழ்நாடு அரசிடமிருந்து ரூ. 5 லட்சமும், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திடமிருந்து ரூ. 3 லட்சமும் பெறப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நல்கையாக ரூ. 40,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திடமிருந்து புத்தாக்கப் பயிற்சிக்காக ரூ. 3 லட்சம் பெறப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா்.
பின்னா், 25 ஆண்டுகள் களங்கமில்லா பணியாற்றிய தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து தலா ரூ. 2,000 ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினாா்.
இவ்விழாவில், பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.