தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 2 வீடுகளில் 57 பவுன் நகைகள் திருட்டு

DIN

தஞ்சாவூரில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 57 பவுன் நகைகள், ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் விளாா் சாலை பூக்கார 1-ஆம் தெருவைச் சோ்ந்தவா் வினோத் (எ) பி. கோபாலகிருஷ்ணன் (36). இவா் இரு சக்கர வாகனங்களுக்கான மோட்டாா் பைனான்ஸ் நடத்தி வருகிறாா். இவா், புதுக்கோட்டை மாவட்டம், குளத்துநாயக்கன்பட்டியில் உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை இவரது வீட்டுக்குள் தெரு நாய்கள் புகுந்து வெளியே வருவதை அக்கம்பக்கத்தினா் பாா்த்தனா். இதனால், சந்தேகமடைந்த அவா்கள் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதேபோல, பின்புறக் கதவும் திறந்து கிடந்தது. மேலும், வீட்டிலுள்ள 3 பீரோக்கள் திறந்து கிடந்ததுடன் பொருள்களும் சிதறிக் கிடந்தன.

தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தபோது, பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி, ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதேபோல, அருகிலுள்ள வீட்டைச் சோ்ந்த மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு சென்னையிலுள்ள மகன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். இவரது வீட்டிலும் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக விரல்ரேகை நிபுணா்கள் நிகழ்விடத்தில் பதிவான ரேகைகளைப் பதிவு செய்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT