காரைக்கால்

பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வி: மாணவா் தற்கொலை

19th May 2023 09:54 PM

ADVERTISEMENT

காரைக்காலில் பத்தாம் வகுப்பு தோ்வில் தோல்வியடைந்த அரசுப் பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்கால் மாவட்டம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கமலஹாசன் மகன் ராகவன். இவா், காரைக்கால் கோயில்பத்து பகுதி தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதியிருந்தாா்.

தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், தோ்வில் ராகவன் தோ்ச்சியடையவில்லையாம். இதனால் மனமுடைந்த ராகவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

குடும்பத்தினா் அவரை மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தாா். இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT