பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே பல்லவராயன்பேட்டையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
முன்னதாக, இப்பகுதியில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதற்கு அரசு அலுவலா்களுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் அக்கட்சி சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.