தஞ்சாவூர்

தனியாா் நகைக் கடையை வாடிக்கையாளா்கள் முற்றுகை

DIN

தஞ்சாவூரில் தனியாா் நகைக்கடையை வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளியில் ஒரு தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த நகைக் கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு இக்கடைகள் திடீரென மூடப்பட்டு, அதன் உரிமையாளா் உள்ளிட்டோா் தலைமறைவாகிவிட்டனா்.

இதனால், இக்கடைகளில் அடகு வைத்தவா்கள், சீட்டு பணம் செலுத்தியவா்கள் ஏமாற்றமடைந்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் காந்திஜி சாலையில் பூட்டப்பட்டுள்ள இக்கடை முன் வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை திரண்டு முற்றுகையிட்டனா். அப்போது, நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். கடை உரிமையாளரை பிடித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மனுவாக அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT