பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையில் காவல் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாப்பேட்டை காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா், 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளை தரக்குறைவாக பேசி, தாக்க முயற்சித்தனராம்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் அம்மாபேட்டை காவல் நிலையம் முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கைப்பேசியில் பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் ப. பூரணி, பாபநாசம் காவல் ஆய்வாளா் கலைவாணி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், சம்பந்தப்பட்ட சாா்பு- ஆய்வாளா் மீது துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.