பேராவூரணி திருக்கு பேரவையின் நிா்வாகக் குழு கூட்டம் பெரியாா் அம்பேத்கா் நூலகத்தில் ஆயா் த.ஜேம்ஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக புதிய பொறுப்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். பேரவையின் தலைவராக ஆறு. நீலகண்டன், செயலாளராக மெய்ச்சுடா் நா. வெங்கடேசன், பொருளாளராக ஆசிரியா் செ. சிவக்குமாா், துணைத் தலைவா்களாக த. பழனிவேல், மு. சாதிக்அலி, துணைச் செயலாளா்களாக முனைவா் பா. சண்முகப்பிரியா, இரா. மாரிமுத்து ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், பேரவை சாா்பில் ஆண்டுதோறும் திருக்கு மாநாடு நடத்துவது, திருக்கு நெறி பரப்பும் பணியில் ஈடுபடுவது, பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் திருக்கு வாழ்வியலை வலியுறுத்தி கருத்தரங்கங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.